search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலககோப்பை கால்பந்து"

    • மொராக்கோ இந்தப்போட்டி தொடரில் தோல்வியை சந்திக்கவில்லை.
    • ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணி அரை இறுதிக்கு இதுவரை நுழைந்தது இல்லை.

    தோகா:

    உலககோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 8.30 மணிக்கு அல்துமாமா ஸ்டேடியத்தில் நடைபெறும் 3-வது கால்இறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல்-மொராக்கோ அணிகள் மோதுகின்றன.

    போர்ச்சுக்கல் அணி 3-வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி லீக் சுற்றில் 3-2 என்ற கோல் கணக்கில் கானாவையும், 2-0 என்ற கணக்கில் உருகுவேயையும் தோற்கடித்து இருந்தது. தென் கொரியாவிடம் 1-2 என்ற கணக்கில் தோற்றது. 2-வது சுற்றில் சுவிட்சர்லாந்தை 6-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.

    போர்ச்சுக்கல் 12 கோல் போட்டுள்ளது. 5 கோல் வாங்கியுள்ளது. சுவிட்சர்லாந்துக்கு எதிரான 2-வது சுற்றில் அந்த வீரர்கள் அபாரமாக ஆடினார்கள்.ரொனால்டோ இடத்தில் இடம் பெற்ற ராமோஸ் ஹாட்ரிக் கோல் அடித்தார். புருனோ பெர்னாண்டஸ், பெப்பே , ரபெல் லியோ போன்ற முன்னணி வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.

    மொராக்கோ முதல் முறையாக உலக கோப்பை அரைஇறுதிக்கு நுழைந்து புதிய சாதனை படைக்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணி அரை இறுதிக்கு இதுவரை நுழைந்தது இல்லை.

    மொராக்கோ இந்தப்போட்டி தொடரில் தோல்வியை சந்திக்கவில்லை. லீக் சுற்றில் பெல்ஜியம்(2-0), கனடா (2-1 ) அணிகளை வீழ்த்தி இருந்தது. குரோஷியாவுடன் கோல் எதுவும் இல்லாமல் டிரா செய்தது. 2-வது ரவுண்டில் ஸ்பெயினை பெனால்டி ஷூட் அவுட்டில் தோற்கடித்தது.

    போர்ச்சுக்கல் அணிக்கு எல்லா வகையிலும் மொரோக்கோ சவால் கொடுக்கும். இதனால் போட்டி பரபரப்பாக இருக்கும்.

    இரு அணிகள் 2 முறை முறை மோதியுள்ளன. இதில் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன.

    அல்கோரில் உள்ள அல்பயத் மைதானத்தில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் கடைசி கால் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப் பாக இருக்கும்.

    பிரான்ஸ் 7-வது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா (4-1), டென்மார்க்கை ( 2-1 ) வீழ்த்தி இருந்தது. துனிசியாவிடம் (0-1) தோற்றது. 2-வது சுற்றில் 3-1 என்ற கணக்கில் போலந்தை தோற்கடித்தது.

    பிரான்ஸ் அணியில் எம்பாப்வே (5 கோல்), ஆலிவர் ஜிரவுட் ( 3 கோல்) , ரேபியாட் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இங்கிலாந்து அணி 4-வது முறையாக அரை இறுதிக்கு நுழையும் வேட்கையில் உள்ளது.

    அந்த அணி தோல்வி எதையும் சந்திக்கவில்லை. ஈரான் ( 6-2 ) , வேல்சை (3-0) வீழ்த்தியது. அமெரிக்காவுடன் (0-0 ) டிரா செய்தது. 2-வது சுற்றில் செனகலை 3-0 என்ற கணக்கில் வென்றது.

    இங்கிலாந்து அணியில் கேப்டன் ஹாரிகேன் , ராஷ்போர்ட், ஷகா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகள் மோதிய போட்டிகளில் பிரான்ஸ் 9-ல், இங்கிலாந்து 17-ல் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் 'டிரா' ஆனது.

    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் போட்டியில் பெல்ஜியம் அணியிடம் தோற்றாலும் ஜப்பான் வீரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை தூய்மைப்படுத்தியது அனைவரையும் நெகிழ செய்தது. #Japan #YuvrajSingh

    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த ஆட்டம் ஒன்றில் வலுவான பெல்ஜியம் அணியை ஜப்பான் எதிர்கொண்டது. ஐரோப்பா நாட்டைச் சேர்ந்த பெல்ஜியத்தை ஆசிய நாடான ஜப்பான் வீழ்த்துவதற்கு அதிக வாய்ப்பு இருந்தது.

    முதல் இரண்டு கோல்கள் அடித்து முன்னிலை பெற்றிருந்த ஜப்பான், அதன்பின் 3 கோல்களை விட்டுக்கொடுத்து மயிரிழையில் வெற்றியை பறிகொடுத்தது. இந்த தோல்வியை தாங்க முடியாத ஜப்பான் வீரர்கள் கதறி அழுதனர். மேலும் போட்டியை நேரில் ரசித்த ரசிகர்களும் கதறி அழுதார்கள்.

    அர்ஜென்டினா, ஜெர்மனி அணிகள் போட்டியில் இருந்து விலகியதும் அப்படியே மைதானத்தில் இருந்து விமான நிலையம் சென்று சொந்த நாடு திரும்பினார்கள். ஆனால், ஜப்பான் அணி வீரர்கள் அப்படி செய்யவில்லை. ஐரோப்பிய அணியான பெல்ஜியத்திற்கு கடும் சவால் கொடுத்து மக்களின் அன்பை ஈர்த்த ஜப்பான் வீரர்கள், தங்களுக்கு ஒதுக்கிய அறைக்குச் சென்று, அந்த அறையை சுத்தம் செய்தனர். அதன்பின் ரஷிய மொழியில் நன்றி என்று ஒரு பேப்பரில் எழுதி வைத்துவிட்டு சென்றனர்.

    மைதானத்தில் விளையாட்டால் மக்களை தங்கள் பக்கம் ஈர்த்த ஜப்பான் வீரர்கள், இந்த செயலால் ஒட்டுமொத்த மக்களையும் நெகிழ வைத்தனர். இதேபோல் போட்டி முடிந்த பின்னர் ஜப்பான் ரசிகர்களும் தோல்வியின் விரக்தியில் இருந்தாலும் மைதான கேலரியை சுத்தம் செய்த பின்னரே அங்கிருந்து வெளியேறினர்.

    ஜப்பான் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் இந்த செய்கையை பாராட்டியுள்ள கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங், “இந்த தூய்மை நடவடிக்கையை ஜப்பான் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து ஒவ்வொரு வீரரும், அணியினரும் உலகில் உள்ள அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்” என ட்வீட்டியுள்ளார்.
    ×